அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

வியாழன், 21 ஜனவரி, 2010

அதிராம்பட்டினம் பேரூராட்சியைக் கண்டித்து ம.ம.கவினர் ஆர்ப்பாட்டம்



அதிரை பேரூராட்சியைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இருசக்கர வாகன ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

ம.ம.க நகரச் செயலாளர் S.S.சேக்காதி அவர்கள் தலைமையில் கஃப்பார் (ஒன்றிய செயலர்), A.J.ஜியாவுதீன் (ம.வ.செயலர்) மற்றும் P.உமர்தம்பி (நகர தலைவர்) முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிரையைச் சார்ந்த ம.ம. தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

ஆர்ப்பாட்டத்திற்கு வருவை தந்தவர்களை M.H.சாகுல் ஹமீது வரவேற்றார். தஞ்சை மாவட்டப் பொருளாளர் S.செய்யது அவர்கள் ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார். கண்டன உரையை ம.ம.க கொள்கை விளக்கப் பேச்சாளர் P.செல்லசாமி நிகழ்த்தினார்.
நகர இளைஞர் அணி செயலாளர் நிஜாம் நன்றிகூற ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக