அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

செவ்வாய், 9 மார்ச், 2010

பதவிகளுக்காக முஸ்லிம்களின் நிலை?


கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் சொகு பங்களாக்கல் பகவான் மறியாதை என உல்லாசமாய் வளம் வந்த நித்தியானந்தா சாமியின் தற்போதைய நிலை? அவரது படத்திற்கு செறுப்படி, கல் வீச்சு, ஆசிரமம் சூரை, மோசடி பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் மேலும் வெளியில் தலைகாட்ட முடியாமல் தலைமறை என படு கேவலமாகிவிட்டது!




இந்த டுபாகூர் பேர்வழி பேசிய டிவிடியை வெளியிடும் படத்தில் இருப்பவர் யார் தெரியுமா? இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன்.





காதர் மொய்தீனை எந்த லிஸ்டில் சேர்ப்பது? எங்கெல்லாம் சாமியார்கள் உள்ளார்களோ அவர்களை தேடிச் சேன்று ஆசி வாங்கவா இவர்கள் முஸ்லிம்களின் பெயரில் கட்சி ஆரம்பித்தார்கள்? அதிலும் இது போன்ற டூபாகூர் பேர்வழி சாமியார்களையும் விட்டு வைக்க வில்லை இந்த காதர் மொய்தீன்! இதை விட கேவலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேறு என்ன இருக்க முடியும்?





சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்ற போர்வையில் ஆட்சி பதவிகளை அனுபவிக்கும் இது போன்ற பெயர் தாங்கி முஸ்லிம் அரசியல்வாதிகளை முஸ்லிம் சமுதாயம் இனம் கண்டு புறக்கனித்தால் தான் இவர்கள் திருந்துவார்கள்!




புதுவை பதிப்பில் நேற்று (8-3-2010) வெளியான செய்தி இது! பாருக் மரைக்காயர் என்கிற இவர் தற்போது ஜார்ண்ட் மாநில கவர்னராக உள்ளார். இவரின் மகன் புதுவையில் கல்வி அமைச்சராக தற்போது உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள இவர்கள் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காங்கிரஸில் அரபு நாட்டு தூதர் உட்பட பல பதவிகளை வகித்த வந்துள்ளனர். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக்கே விரோதியாகி விட்ட இவருக்கு முஸ்லிம் பெயர் வைத்துள்ளதால் காங்கிரஸில் பதிவகள், அதிகாரங்கள்! இவருக்கு இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமில்லை என்பதை காங்கிரஸ் அரசு விளங்கிக் கொண்டு முஸ்லிம் என்கின்ற காரணத்தினால் கொடுக்கப்பட்ட பதிவிகளை திரும்ப பெற்றால், பெயர் தாங்கி முஸ்லிம்களாக உள்ள அரசியல் வாதிகளுக்கு அது ஒரு பாடமாக இருக்கும்.


நன்றி – தமிழ்நாடு தவஹீத் ஜமாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக