குணங்குடி அனீபா தொடர்பான வழக்கில் தொடர்ந்து தாமதப்படுத்தப்படும் தீர்ப்பை உடனடியாக வழங்கக் கோரியும், நீதித்துறையின் மெத்தனத்தை கண்டித்தும் உயர்நீதிமன்றம் நோக்கி பேரணி ஒன்றை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதனன்று (மே 5, 2010) நடத்தியது. பேரணியின் இறுதியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளரிடம் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான ஒரு குழு கோரிக்கை மனுவை அளித்தது.




30.4.2010 அன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று நினைத்த நேரத்தில், ''இவ்வழக்கில் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்'' என்று கூறி வரும் 10.5.2010 அன்று இவ்வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதியால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை, வழக்கறிஞர்களது வாதங்கள் அனைத்தும் முடிவுற்று இரு மாதங்கள் கழிந்த பின்பும் இவ்வழக்கில் தீர்ப்பை வழங்குவதைத் தொடர்ந்து தாமதப்படுத்துவது மிகவும் மோசமான பாதிப்பை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். எனவே நீதி மறுக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள குணங்குடி அனீபா உள்ளிட்டவர்களின் வழக்கில் உடனடியாக தீர்ப்பை அறிவிக்க கோரியும் நீதியை பெற்றுக் தரக்கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உயர்நீதிமன்றம் நோக்கி நீதி கோரும் பேரணியை நடத்தியது. த.மு.மு.க தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் துறைமுகம் தொலைப்பேசி இணைப்பகம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்றவர்கள் ராசாசி சாலையில் உள்ள இந்திய வங்கி அருகில் தடுத்து நிறுத்தப்பட்டனர், பின்னர் தமுமுக தலைவர் தலைமையில் பிரதிநிதகள் குழு சென்னை உயர;நீதிமன்றம் சென்று பதிவாளரிடம் மனு ஒன்றை சமர்பித்தனர். தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துஸ் ஸமது, பொருளாளர் எஸ்.எஸ் ஹாருன் ரஷீத் துணைப் பொதுச் செயலாளர் எம் தமீமுன் அன்சாரி உட்பட இப்பேரணியில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அணிவகுத்தனர்.

இந்நிலையில் பேரணியின் முடிவில் கைதாவதற்கு முன் தமுமுக தலைவரின் தலைமையில் நிர்வாகிகள் குழு உயர்நீதிமன்ற பதிவாளரை நேரில் சந்தித்து விரைவான தீர்ப்பு கோரி மனு கொடுத்தது. இது சம்மந்தமாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பூந்தமல்லி விரைவு நீதிமன்ற நீதிபதி பிரேம் குமாரை நேரில் வருமாறு அழைத்திருப்பதாகவும், அப்போது இந்த மனுவை வைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விரைவான தீர்ப்பை பற்றி பேசப் போவதாகவும் பதிவாளர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக