வல்ல ரஹ்மானின் வற்றாத பெருங் கருணையால் நேற்று (08 -05 -2010) சனிக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு துபையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஓரணியில் ஒன்று திரண்டு முனைவர் அப்துல்லாஹ்வை வரவேற்கும் மாபெரும் இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றை மிகச் சிறப்புடன் நடத்தியது.


எதையும் இறைவனிடம் மட்டுமே கேட்க வேண்டும், இறைவனுக்கு ஒருபோதும் இணை வைத்து விடக்கூடாது என்ற உன்னதமான தவ்ஹீதை எடுத்துச் சொல்லி, ஒற்றுமையுடன் அனைவரும் திகழ வேண்டும். நாளைய மறுமையில் அனைத்து முஸ்லிம்களும் சுவனம் செல்ல வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உரையாற்றிய விதம் அனைவரையும் பரவசப்படுத்தியது. அவருடைய உணர்வுபூர்வமான உரைக்கு கிடையில் மக்கள் அல்லாஹ் அக்பர் என உற்சாகத்துடன் எழுப்பிய பதிலுரைகள் அறிஞர் அப்துல்லாஹுக்கு நல்ல வரவேற்பாக திகழ்ந்தது. சுமார் 1500க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள்.


செய்தி மற்றும் படங்கள் : அபூஉமைமா, இப்னு ஹனீஃபா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக