அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

செவ்வாய், 1 ஜூன், 2010


சகோதரா உனக்கு எதிராக உலகமுழுவதும் சதிவலை!
எப்போது நீ விழித்து எழுவாய்....!!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இஸ்லாம் இன்றைய உலகில் அதி வேகமாக பரவிவரும் இத்தருணத்தில் இஸ்லாத்தை தமது வாழ்வியல் நெரியாக ஏற்றுக்கொண்டுள்ள முஸ்லிம்கள் அமைதியாக தங்கள் வாழ்க்கையை, நாளை மறுமைக்காக இவ்வுலகிலே கழித்துவரும் நிலையில், ஒட்டுமொத்த இஸ்லாத்திற்கும் எதிராக பல்வேறு தளங்களில் ஆயுதம் ஏந்தியும், அறிவாயுதம் ஏந்தியும் மிக கொடூரமாக போர்தொடுத்துவருகின்றனர். அதிலும் குறிப்பாக மீடியாக்கள் தங்களது முழு பலத்தையும் இஸ்லாத்தை ஒழிப்பதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் இஸ்லாத்தை அழிக்க நவீன சித்து வேளைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

முஸ்லிம்கள் தங்களது உயிருக்கும் மேலாக மதிக்கும் அகிலத்தின் அருட்கொடை முஹம்மது நபி (ஸல்) அவர்களை குறுஞ் செய்திகள், மீடியாக்கள்,பத்திரிக்கைகள், இணைய தளங்கள் போன்றவைகளின் வாயிலாக படு கேவலமான முறையிலும், சித்திரம் என்ற பெயரில் நபி (ஸல்) அவர்களுக்கு உருவம் கொடுக்கும் வேலையிலும், நபி (ஸல்)அவர்கள் இப்படியெல்லாம் கொடூரமாக வெல்லாம் வாழ்ந்தார்கள் என்று அவர்கள் மீது இட்டுக்கட்டி பொய் பிரச்சாரங்களை யூதர்களும் இன்னும் இஸ்லாத்திற்கு எதிரானவர்களும் செய்துவரும் வேலையில் இன்றைய நவீன ஷைத்தான்களாக இருக்கும் மீடியாக்கள் அப்படியே அதை வாந்தி எடுத்து தங்களது சுய விளம்பரத்திற்க்காகவும், தங்களது பத்திரிகைகள் சூடான செயதி ஏந்தி வந்து அதன் மூலம் சர்சை ஏற்ப்பட்டு தனது பத்தரிக்கை விளம்பரப்படவேண்டும் கோடிகணக்கான பணத்தை சுரண்ட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு முழு வீச்சில் இறங்கி க(ள்)ளப்பணி செய்துகொண்டு இருக்கிறார்கள்.

2008ம் ஆண்டு டென்மார்க் என்ற யூத நாட்டின் பத்திரிகையான பொலிட்டிக்கன் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான கோபன்ஹெகன் என்பவன் நபி (ஸல்) அவர்களை கேலிசித்திரம் வரைந்து வெளியிட்டு உலகில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எதிர்ப்பலைகளையும் வாங்கிகட்டிக்கொண்டு முஸ்லிம்களிடம் மன்னிப்பும் கோரியது. அதனை தொடர்ந்து பல்வேறு இணையதளங்கள் வாயிலாக அவ்வப்போது முஸ்லிம்களையும், நபி (ஸல்) அவர்களையும் விமர்சித்தும், கேலிச்சித்திரம் வரைந்தும் முஸ்லிம்களுக்கு எதிராக மறைமுக போர் தொடுத்து வந்தார்கள்.

அதில் தமிழகமும் விதிவிலக்கில்லை. இங்கே மத துவேசத்தை பரப்பி அதன் மூலம் ஆதாயம் தேடும் பாசிச சக்திகளின் பார்ப்பன ஏடான தினமல(ம்)ர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்து முஸ்லிம்களின் மனதை புன்படுத்தியதோடு தனது பாசிச ஹிந்துத்துவ வெறியின் சூழ்ச்சியாக முஸ்லிம்களை சீண்டிப்பார்த்தது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். அதற்கு பிறகு தவறுதலாக வெளியிட்டு விட்டோம் என்பதோடு மன்னிப்பும் கேட்டு தற்காலிகமாக பின்வாங்கி கொண்டது தினமலர்.

அதன் பின் சில மாதங்கள் கழிந்த பின்னர் நக்கீரன் வாரஇதழ் காமவெறியன் நித்யானந்தா சொன்னதாக ஒரு செயதியை வெளியிட்டு முஸ்லிம்களை மறைமுகமாக சீண்டியது உடனே பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் கண்டன போர் குரல் எழுப்பியதோடு நக்கீரன் பத்திரிகை தனது இணையதளத்திலும், பத்திரிக்கையின் மூலமும் வருத்தத்தை தெரிவித்து செய்தி வெளியிட்ட வேலையில் அதன் காயம் முஸ்லிம்களின் உள்ளத்தை விட்டு நீங்குவதற்கு முன் இந்தமாதிரியான செய்திகளையோ அல்லது முஸ்லிம்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் நபி (ஸல்) அவர்களுக்கு உருவம் கொடுத்து கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்டால் அதன் மூலம் பெரும் சர்ச்சை ஏற்படும் முஸ்லிம்களின் மனமும் பெரிதளவில் பாதிக்கப்படும் என்று தெரிந்திருந்தும் சன்குழுமத்தின் கீழ் வெளிவரும் முத்தாரம் என்ற இதழ் நபி (ஸல்) அவர்களை விமர்சித்து கேலிசித்திரம் வரைந்து செய்தி வெளியிட்டு அதன் மூலம் சுய லாபம் அடைந்துகொண்டது. முஸ்லிம்களும் பல இயக்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்தவுடன் நாங்கள் தவறாக வெளியிட்டுவிட்டோம் என்று வருத்தம் தெரிவித்துகொண்டது.மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததாகவும் சில இயக்கங்கள் கூறின.

இப்பொழுது இணையதளங்களின் ஹீரோவாக இருக்கும் பேஸ்புக் என்ற யூதனின் இணையத்தளம் தற்போது Everybody Draw Mohamed அதாவது...ஒவ்வொருவரும் முஹம்மதைப்பற்றி வரையலாம் என்ற ஒரு பக்கத்தை உருவாக்கி உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் மனதை ஓங்கி தட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல இன்றைய இளைஞர்கள் கோடிகணக்கான பேர் இந்த இணையதளத்தில் தான் வீணாக நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்த இணையத்தளம் மக்களை குறிப்பாக இளைஞர் மற்றும் இழம்பெண்களை அதிவேகமாக வழிகெடுத்துவருகிறது எனபது உலகம் அறிந்த உண்மை.

ஆனால் உலகம் முழுவதும் தன்னகத்தே 56 நாடுகளை கொண்ட முஸ்லிம்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த இணையதளத்தை கண்டித்தார்களா அல்லது அதற்கு எதிராக ஏதேனும் ஒன்றை செய்தார்களா என்றால் இல்லை என்ற பதிலே முதன்மையாக இருக்கிறது. இதில் சொல்லத்தக்க வகையில் பாகிஸ்தான் முதன் முதலில் இந்த பேஸ்புக் என்ற இணையதளத்திற்கு தடைவிதித்து தனது கண்டனத்தை பதிவு செய்தது. அதன் பிறகு இந்தியாவில் ஏற்ப்பட்ட எதிர்ப்பலையின் காரணமாக பேஸ்புகின் Everybody Draw Mohamed என்ற பக்கத்திர்க்கு மட்டும் தடைவிதித்துள்ளதாக நமக்கு செய்தி எட்டுகிறது. இதற்கு அப்படியே எதிர் மாற்றமாக இஸ்லாமிய நாடுகளில் இது வரை தடைகள் இந்த இணையதளத்திற்கு வரவில்லை. எது எதற்கோ தடைவிதிக்கும் வளைகுடா நாடுகளில் நம் நபிகள் நாயகத்திற்கும் இஸ்லாத்திற்கும் எதிராக களமிறங்கியிருக்கும் இந்த இணையதளத்திற்கு இன்று வரை தடை வரவில்லை என்றால் இப்படி முஸ்லிம்களை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு இன்னும் வீரியம் அதிகம் ஏற்பட்டு தெளிவாக திட்டமிட்டு விமர்சிக்கத்தான் போகிறார்கள். நமக்கென்ன என்ற போக்கில் வாழும் இஸ்லாமியர்களே தெளிவாக ஒன்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன், உங்களை நம்பி அல்லாஹ் இல்லை. மாறாக அவனை நம்பித்தான் நீங்கள் இருக்கின்றீர்கள். மாற்றமாக நீங்கள் நினைத்திருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் உண்மையாக நீங்கள் அன்புவைத்திருந்தால் (அறிவாயுதம் கொண்டு) எதிர் கொள்ள தயாராகுங்கள். உங்களால் முடிந்தால் நீங்கள் செய்யுங்கள் முடியாதென்றால் இறைவனின் கூற்றுப்படி


ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)
4:133 மனிதர்களே! அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான் இன்னும், அவ்வாறு செய்ய அல்லாஹ் பேராற்றல் உடையவன்.

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தன் தோழர்களிடத்தில் ஒன்றை கூறுகிறார்கள். தோழர்களே நீங்கள் உங்கள கண் முன்னால் ஒரு தவறை கண்டால் முதலில் உங்களுடைய கையால் தடுங்கள் உங்கள் கையால் தடுக்க சக்தியில்லை என்றால் உங்கள் நாவால் தடுங்கள் அதற்கும் உங்களிடத்தில் வாய்ப்பு இல்லையென்றால் கடைசியாக (மூன்றாவதாக) மனதால் வெறுத்து ஒதுங்கி விடுங்கள். இதுவே ஈமானின் கடைசி நிலை என்று சொல்லும் நபி (ஸல்(அவர்களை தங்கள் உயரினும் மேலாக மதிக்கும் முஸ்லிம்கள் குறிப்பாக அரபு மொழி பேசும் வளைகுடா முஸ்லிம்கள் ஈமானே இல்லாத (அல்லாஹ் காப்பாற்றுவானாக) எல்லா முஸ்லிம்களும் அல்ல, அதிகமானோர் (நிலையில் இருந்து வருகிறார்களே இவர்கள் எப்போது விழித்து எழுவார்கள். அவ்வாறு விழிப்புணர்வு அடையவில்லை என்று சொன்னால் ஆதிக்க வெறிபிடித்த யூதர்கள் தங்களது நாடுகளை (ஒவ்வொன்றாக அழித்துவிட்டு) தாக்க வரும்போது இவர்களுக்காக குரல்கொடுக்க யாருமே இருக்க மாட்டார்கள் மாறாக அல்லாஹ்வின் உதவியும் இவர்கள் மீது இறங்க வாய்ப்பில்லை. என்பதையாவது இவர்கள் தெளிவாக விளங்கிக்கொண்டு தங்களை அழிக்கும் சக்திகளை முஸ்லிம் நாடுகள் ஒற்றுமையோடு எதிர்கொள்ள முன்வரவேண்டும். இதற்கு இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் எடுத்துக்காட்டு என்பதையும் சொல்லிக்கொள்கிறோம்.

ஆக்கம் -- பொறுமையுடையான்

1 கருத்து: