அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

புதன், 3 மார்ச், 2010


ஊருக்குள் விடாதீர்!!!

விளம்பரமல்ல விபரீதம்!! உஷார் ....

இன்று மாறிவரும் உலகில் நம் சமுதாயங்களின் பிளவுகளைச் சொல்லி மாளாது தினம் ஒரு இயக்கம் உருவாகிகொண்டுதான் உள்ளன. எத்தனை ஜமாத்துக்கள், கழகங்கள் லீக்குகள். இது போன்ற சமூதாய(?)அமைப்புகள் சில நேரங்களில் நமக்கு எரிச்சலை தந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஆதரித்தும் விமர்ச்சித்தும் வருகிறோம்.

ஆனால் தற்பொழுது "சத்தியமே ஜெயம்"என்ற பெயரில் சமீப நாட்களாக ஓர் இயக்கம் சிங்கப்பூரை தலைமயகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தை சார்ந்தவர்கள். அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட சூது,மது,மாது, விபச்சாரம் இவையனைத்தும் விதியின்படி தான் நடக்கிறது. அல்லாஹ் நான் குடிப்பதற்கு எனக்கு விதியாக்கியுல்லான் இறைவன் நாடியுள்ளான் நான் குடிக்கிறேன்" என்பது போன்ற பதில்கள்தான் வருகிறது.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் இது பற்றி கேட்டபொழுது 'எந்த ஒரு செயலும் இறைவன் நாடினால்தான் நடக்கும் அது போல்தான் இதுவும்" என்றார் கொள்கை???ப்பிடிப்புடன் இவ்வியக்கத்தின் முக்கிய நபர் சிங்கபூரில் வசிக்கும் முத்துப்பேட்டையைச் சார்ந்த முஸ்லிம் (?) ஆவார். இவர் நடத்தும் மினிமார்ட்டில் மது போன்ற போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அவரை எனது நண்பர் மூலம் தொடர்புகொண்டு இது விஷயமான சில சந்தேகங்ககளை கேட்ட பொழுது என்னை நேரில் வருமாறு அழைத்தார். எனது வேலைப்பளு காரணமாக நேரில் செல்ல இயலவில்லை

அன்பார்ந்த அருமை நண்பர்களே! நாம் இயக்கங்களால் பிரிந்துகிடந்தாலும் இது போன்ற அபாயகரமான, அல்லாஹ்வும் ரசூலும் சொல்லித்தராத மிகக்கேடுகெட்ட வழிகளில் செல்ல வேண்டாம் இது போன்ற இயக்கங்களின் பெயரைச் சொல்லி யாரேனும் ஊருக்குள் வந்தால் விரட்டியடிக்க தயாராக இருக்க வேண்டும். பல அப்பாவி இளையதலைமுறையினரை மூளைச்சலவை செய்து இந்த பலாயின் பக்கம் ஈர்த்து வருகின்றனர். இவர்களின் சூழ்ச்சி வலையில் விழுந்தஇளைஞர்கள் பலர் தங்களுக்குச் சாதகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் அவர்களை நம்பி பல லட்சம் செலவு செய்து இங்கு அனுப்பிவைத்த பெற்றோர்கள் கவலையில் கரைந்து வருவதும் இவர்களின் பார்வையில் இதுவும் "விதி" தான் என்று எண்ணிக்கொண்டுள்ளனர் போலும்!

இவர்கள் நடத்தும் வணிக நிறுவனங்களில் SJ முத்திரை போட்டுவைத்துள்ளனர்.

எனவே அன்பு நண்பர்ளே... இதுபோன்ற வழிகெடுக்கும் இயக்கங்ளை ஊருக்குள் விடாமல் நம் சமுதாயத்தை காப்பது உலமாக்களுக்கும் நமக்கும் தலையாய கடமையாக உள்ளது. அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றி நேர்வழி காட்டுவானாக! ஆமீன்!!

thanks for adiraixpress.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக