அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

செவ்வாய், 18 மே, 2010


புறக்கணிக்கப்படும் ஃபலஸ்தீன் செய்திகள், பார்வையிழந்த ஊடகங்கள்

தற்பொழுது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரானிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க மும்முரமாக களம் இறங்கி இருப்பது அனைவரும் அறிந்த செய்தியே.


இந்த செய்தியை அனைத்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா ஊடகங்கள் முன்னிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் போது மற்றொரு புறம் ஃபலஸ்தீனம் பற்றிய செய்தியை வேண்டுமென்றே அனைத்து ஊடகங்களும் மறைத்துக் கொண்டிருக்கிறது.


கடந்த ஆறு மாதங்களாக ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது. என்று மீண்டும் மீண்டும் கூறி வரும் அனைத்து ஊடகங்களும். ஜெருசலம் பகுதியில் இஸ்ரேல் கடந்த ஆறு மாதமாக ஆக்கிரமிப்புகள் நடத்தி அங்கு தனது திருட்டுத் தனமான குடி ஏற்றங்கள் அரங்கேற்றி வருகிறது.


இந்த செய்தியை அனைத்து ஊடகங்களும் மறைத்து இஸ்ரேலுக்கு ஆதரவாக ஃபலஸ்தீனம் பற்றிய ஒரு செய்தியையும் வெளியிடாமல் மறைத்து வருகின்றன.


இதன் மூலம் இஸ்ரேல் தனது திட்டத்தை உலக நாடுகள் தெரியாத வண்ணம் மிகவும் கட்சிதமாக நகர்த்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக