அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 5 செப்டம்பர், 2011

முஸ்லிம் இட ஒதுக்கீடு உயர்கிறது.

முஸ்லிம்களுக்கான இட ஒதுகீட்டை அதிகப்படுத்த வேண்டும் சட்ட சபையில் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை.

சட்டசபையில், நேற்று வருவாய் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இதில், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசியதாவது: பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடாக, 3.5 சதவீதம் இருக்கிறது. இதை உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என, தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் தெரிவித்தார். அறிவிப்பை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ படிப்புகள் மற்றும் அரசு கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் போன்றவற்றில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா என்பது தெரியவில்லை. இதில் பெரும் குழப்பங்கள் இருக்கின்றன. சிறுபான்மையினர் நலத்துறைக்கு, தனி செயலரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.


இதற்கு பதிலளித்து பேசிய பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகம்மத்ஜான்: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக