அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 5 செப்டம்பர், 2011

முத்துப்பேட்டையில் 10ம் தேதி விநாயகர் ஊர்வலம் ; 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் வரும் 10ம்தேதி நடக்கிறது. இதையொட்டி 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது என்று மத்திய மண்டல ஐஜி மாஹாலி நேற்று ஆய்வு செய்தார்.


முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஊர்வலம் துவங்கும் இடமான ஜாம்புவானோ டை சிவன்கோயிலில் துவங்கி ஊர்வலம் வரும் பாதை உள்பட அனைத்து இடங்களை மத்திய மண்டல ஐஜி மாஹாலி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அப்போது அவர், ‘’ கடந்த ஆண்டு ஊர்வலம் நடை பெற்ற பாதையிலே இந்தாண்டு ஊர்வலம் நடைபெறும். இந்தமுறை கூடுதலாக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.


சுமார் 2 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைதியாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார். ஆய்வின்போது தஞ்சை சரக டிஐஜி ரவிக்குமார், திருவாரூர் எஸ்பி சேவியர் தன்ராஜ், ஏடிஎஸ்பிக்கள் ராஜேந்திரன், கோபி ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக