அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

புதன், 20 ஜனவரி, 2010

மனிதநேய மக்கள் கட்சியின் முதல் அரசியல்மாவட்ட மாநாடு திருவாரூரில்..

அல்லாஹ்வின் திருப்பெயரால்...



திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை மாநாடு ஜனவரி 24,2010 அன்று நடைபெற இருக்கிறது.
இறைவன் நாடினால்...




கடந்த 2009 பிப்ரவரி 2 ம் தேதி தமிழக அரசியலின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்த மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க மாநாடு தாம்பரத்தில் வெகு விமர்சையாக சமுதாய மக்களுக்கு மத்தியில் நடந்து முடிந்தது யாவரும் அறிந்ததே.அதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டு 2 மாதங்களே ஆன மமக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க நேரிட்டதோடு மட்டுமல்லாமல் திமுகவால் ஏவிவிடப்பட்ட முதல் அரசியல் துரோகத்தையும் இறைவனின் மிகப்பெரும் கிருபையினால் முறியடித்து சமுதாயத்தின் தன்மானத்தையும், அடையாளத்தையும் யாருக்காகவும் அடகு வைக்காமல் இருந்த பதவியையும்,எதிர் நோக்கி இருந்த பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு சமுதாய மக்களின் துனையோடும் படைத்தவனின் துணையோடும் அரசியல் குண்டர்களுக்கு மத்தியிலும் பணபலமிக்க அரசியல்வாதிகளுக்கு மத்தியிலும் 4 தொகுதிகளில் போட்டியிட்டு முஸ்லிம்களாலும் அரசியல் களம் காணமுடியும் என்று மமக நிருபித்துக்காட்டியது. மனிதநேய மக்கள் கட்சியின் துணிச்சலையும், தேர்தல்களப்பணிகளையும் கண்டு ஆளுங்கட்சியாக இருக்கட்டும், எதிர்கட்சியாக இருக்கட்டும் கதிகலங்கி நின்றதோடு மட்டுமல்லாமல் அரசியல் களத்தில் தனக்கு சவாலாக இருக்கும் மமக மீது தனது ரவுடிகளை திமுக ஏவிவிட்டது.





அதன்பிறகு மனிதநேய மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் பல்வேறு சமுதாய மக்களை இணைக்கும் விதத்தில் தனது பணிகளையும்,சேவைகளையும் விரிவு படுத்தி கடந்த இடைத்தேர்தலையும் பல சூழ்ச்சிகளுக்கு மத்தியில் சந்தித்து போட்டியிட்ட 3 தொகுதிகளில் 2 தொகுதிகளை மனிதநேய மக்கள் கட்சி கைப்பற்றி அரசியல் கட்சிகளை குறிப்பாக திமுக கூட்டணியை சற்று திகைக்க வைத்த முதல் முஸ்லிம் அரசியல் கட்சி மமக. (அல்ஹம்துலில்லாஹ்...)




அதன் தொடர்ச்சியாக மமக மாவட்ட வாரியாக மாநாடுகளை நடத்த திட்டமிட்டு முதல் அரசியல் (ஒடுக்கப்பட்டோரின் வாழ்வுரிமை) மாநாட்டை நமது மாவட்டமான திருவாரூரில் நடத்த இருக்கிறது. முஸ்லிம் சமுதாய மக்களே மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களே தங்களின் அரசியல் பலத்தை நிருபீக்க,கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துவைக்க ஒட்டுமொத்த குடும்பத்தோடு பங்கேற்க்க வாரீர்.!!




சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் பிரச்சனைகளை முன்வைத்து நடைபெறும் இம்மாநாடு சோழ மண்டலத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தப்போகிறது.(இறைவன் நாடினால்....)


என அன்போடு அழைக்கிறோம்.


அழைப்பது...

மனிதநேய மக்கள் கட்சி.(மமக)
முத்துப்பேட்டை நகரம். திருவாரூர் மாவட்டம்..




குறிப்பு - மாநாட்டிற்கு முத்தபேட்டையில் இருந்து வாகனங்கள் எற்பாடு செய்யப்பட்டுள்ளது. சகோதரர்கள் அணைவரும் குடும்பத்தோடு பங்கேற்ப்பீர்.


தொடர்புக்கு –

சகோ.முஹம்மது அலீம் மாவட்ட பொருளாளர்.மமக
9750505098

சகோ.அஹம்மது அலி.. நகர செயலாளர்.மமக

மனிதநேய மக்கள் கட்சி. முத்துப்பேட்டை நகரம்

1 கருத்து:

  1. அன்புச்சகோதரர் மொய்தீன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்..,


    மாநாட்டின் போஸ்டர் பைல் இருந்தால் உடனடியாக அனுப்பி வைக்கவும். வெள்ளிக்கிழமை வாரவிடுமுறைக்கு குவைத் நகரம் முழுக்க ஒட்டுவதற்கு ஏதுவாக இருக்கும். மக்களுக்கும் செய்திகள் சொல்லலாம். மாநாட்டு வெற்றிபெற துஆ செய்கின்றோம். அனைவருக்கும் ஸலாம் சொல்லவும்.

    JPEG or GIF any type file please send.


    திருச்சி. அமானுல்லாஹ்

    www.q8tmmk.blogspot.com

    பதிலளிநீக்கு